(ஊடகப்பிரிவு)
தேசிய காங்கிரஸ் திகாமடுல்ல மாவட்ட 3ம் இலக்க வேட்பாளரும் சட்டம் ஒழுங்கு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளருமான ஏ.எல்.எம்.சலீம் மற்றும் 9ம் இலக்க வேட்பாளரான எஸ்.எல்.எம்.பழீல் ஆகியோரை ஆதரித்து பாலமுனை உதுமாபுரத்தில் கருத்தரங்கு நடைபெற்றது.
தேசிய காங்கிரஸ் உதுமாபுரம் கிளைக்குழு ஏற்பாட்டில் எம்.கே.ஏ.ஜப்பார் தலைமையில் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் இக்கருத்தரங்கு நடந்தேறியது.
இதன்போது, அதிகளவான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.