பிராந்தியம் | சமூக வாழ்வு | 2020-04-15 17:30:07

நாளை பொது விளையாட்டு மைதானத்தில் தற்காலிக சந்தை நடைபெறும்.

(ஒலுவில் ஆதிக்)

அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில்
2020.04.16 நாளை வியாழக்கிழமை காலை 6.00 மணி தொடக்கம் மாலை 4.00 வரையும் அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் மரக்கறி வகைகள் மற்றும் மீன்களை கொள்வனவு செய்வதற்கான தற்காலிகமாக ஏற்பாடுகள் பற்றிய கூட்டம் இன்று (15) எம்.ஓ.எச் டாக்டர் ஏ.எம் .இஸ்மாயில் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தின் தீர்மானமாக,
#வியாபார நிலையங்கள், வங்கிகள், இறைச்சிக் கடைகள் போன்றவற்றில் மக்கள் 1 மீட்டர் இடைவெளியில் நின்று தங்களது தேவைகளை நிறைவேற்ற வேண்டும்.

#ஒவ்வொரு நபர்களதும் பாதுகாப்பின் நிமிர்த்தம் மூக முடி அணிந்து வரவேண்டும்.

#நாளை தங்களுக்கு உதவி செய்வதற்காக முப்படையினரும், தொண்டர் அமைப்புகளும் செயற்படவுள்ளனர்.

இக் கூட்டத்தில் பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எல். அமானுல்லாஹ், உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ.சீ.எம் அஹமட் நஸீல், பிரதேச சபையின் செயலாளர் எம்.ஐ.எம்.பாயிஸ், அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி உட்பட அதிகாரிகள் கலந்து
கொண்டனர்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts