(ஒலுவில் ஆதிக்)
அக்கரைப்பற்றிலிருந்து ஒலுவில் களியோடை பாலத்தின் (A4) வீதியின் ஊடாக நிந்தவூர் மற்றும் ஏனைய ஊருகளுக்கும் செல்லும் சகல வாகனங்களுக்கும் முற்றாக நுண்ணுயிர் தொற்று நீக்கி மருந்து விசிறப்பட்டதன் பின்னரே பயணிக்க அனுமதியளிக்கப்படுகின்றது.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜி.சுகுணனின் அறிவுறுத்தலுக்கமைவாக இதற்கான நடவடிக்கைகளை நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கு ஆதரவாக பொலிஸார் மற்றும் இராணுவப் படையினர் ஆகியோர்களின் உதவியுடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.