பிராந்தியம் | சமூக வாழ்வு | 2020-04-07 12:57:19

நாட்டில் ஏற்பட்டிருக்கும் அசாதாரன சூழ்நிலையின் காரணமாக கஷ்டப்படும் ஏழைகளுக்கான உலர் உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு

சாய்ந்தமருது SYF அமைப்பினரால் நாட்டில் ஏற்பட்டிருக்கும் அசாதாரன சூழ்நிலையின் காரணமாக கஷ்டப்படும் ஏழைகளுக்கான உலர் உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு
28.03.2020 மற்றும் 05.04.2020 தினங்களில் இரு கட்டங்களாக இறைவனின் துணையோடு வெற்றிகரமாக இடம்பெற்றது.

இந்த அவசர ஏற்பாட்டில் தாங்களும் பங்குதாரராக உதவியதற்கு எமது அமைப்பு சார்பாக கோடான கோடி நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதில் திருப்தியடைகிறோம்.

தங்களது தூய எண்ணத்தை ஏக இறைவனும் அவனுடைய தூதரும் பொருந்திக் கொள்ள வேண்டும் என பிரார்த்திக்கிறோம்.

மேலும், முதலாவது மற்றும் இரண்டாவது கட்டத்தின் போது பல குடும்பங்களை திருப்திப்படுத்தினாலும் இன்னும் சில குடும்பங்கள் இந்த சூழ்நிலையில் அவதிப்படுவதை எங்களால் அறிய முடிந்தது. மூன்றாவது கட்டமாகவும் இந்த நிவாரணப்பணியை மேற்கொள்ள தூய எண்ணம் கொண்டிருப்பதால்,
தங்களால் அல்லது தமக்குத் தெரிந்தவர்கள் மூலம் ஏதும் பங்களிப்புகள் செய்வதற்கு தூய எண்ணம் கொண்டிருந்தால் எங்களைத் தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.

தங்களது தூய எண்ணத்திற்கு இறைவனின் கூலி ஈருலகத்திலும் கிடைக்க வேண்டும் என்று பிராத்திக்கிறோம்.

நன்றி.
SYF நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்.
தொலைபேசி இலக்கம்:- 0774498154/0755852817

கணக்கு இலக்கம்:- 112654392870
ஏ.எம்.எம்.றில்வான் - சம்பத் வங்கி சாய்நதமருது.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts