வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய நிலையில் கொரோனா வைரஸ் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படாமல் மறைந்திருப்போருக்கு அரசாங்கம் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது.
அந்த வகையில் இன்று (24) நள்ளிரவு 12 மணிக்குள் காவல்துறையில் அல்லது வைத்தியசாலையில் தஞ்சம் புகாமல் இருப்போர் தொற்றுநோய் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் 14 நாட்கள் தொற்றுப் பரிசோதனை முகாம்களில் தங்கவைக்கப்படுவார்கள் அதன் பின்னர் அவர்களுக்கு 3 வருடம் கட்டாய சிறை தண்டனை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.