(ஒலுவில் ஆதிக்)
கவிஞர் ஒலுவில் ஆதீக்கின் வேண்டுகோளுக்கிணங்க தமிழா ஊடக வலயமைப்பின் முயற்சியினால் தென்னிந்தியாவைச் சேர்ந்த பாடலசிரியர், கவிஞர், நாவலாசிரியர் திரு. வித்யாசாகர் அல்-மினாரா வித்தியாலயத்திற்கு விஜயம் செய்து தனது சொந்த நிதியில் பாடசாலையின் நூல் நிலையை அமைத்து சுமார் 5 இலட்சம் ரூபா பெறுமதியான நூல்களையும் அன்பளிப்புச் செய்த நிகழ்வு (26)அன்று ஆதிக் இன் தலைமையில் அல்-மினாரா பாடாசாலையில் நடைபெற்றது.
இதில் தமிழா ஊடக அமைப்பின் பணிப்பாளர் எஸ்.எம். ஜெலீஸ் ஆலோசகர் எம்.ஐ. அச்சிமுகம்மட், இளம் பரிதி பதிப்பாசிரியர் ஆகிய அதிதிகளையும் நூல் நிலையத்தை திறந்து வைத்து நூல்களை அதிபர் எஸ். ஆதம்பாவாவிடம் கையளித்தார்.