பிராந்தியம் | அரசியல் | 2020-02-17 15:49:21

முன்னாள் முதலமைச்சரின் ஊடக இணைப்பாளர் எஸ்.எல்.முனாஸ் தேசிய காங்கிரசில் இணைந்து கொண்டார் !!

(ஹுதா உமர்)

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உறுப்பினரும், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரின் ஊடக இணைப்பாளரும், அம்பாரை மாவட்ட பொதுப்பணிகள் அமைப்பின் தலைவருமான எஸ்.எல். முனாஸ் தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் முன்னிலையில் தேசிய காங்கிரசில் இணைந்து கொண்டார்.

இணைந்து கொண்ட பின்னர் கருத்து தெரிவித்த அவர், கிழக்கு மக்களுக்கு தேசிய காங்கிரஸின் கொள்கைகளும் அதன் திட்டங்களும், தலைவரின் நேரிய வழி என்பனவே தற்போதைய காலத்தின் அவசியமாக இருப்தை தவிர்க்க முடியாது என்பதை அறிந்ததாகவும் அதனால்
தேசிய காங்கிறஸின் கொள்கைகளை ஏற்று கட்சியின் தலைவர் ஏ.எல்.எம் அதாஉல்லா அவர்களின் முன்னிலையில் தான் இணைந்து கொண்டதாகவும் தெரிவித்தார்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts