பிராந்தியம் | சமூக வாழ்வு | 2020-02-09 16:58:10

மருதமுனை அரச சேவையாளர்களின் ஒன்று கூடல் இன்று இடம் பெற்றது.

- ஏ.எல்.எம்.ஷினாஸ் - 

மருதமுனை அரச சேவையாளர்களின் ஒன்று கூடல் அவையத்தின் தலைவர் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார் தலைமையில் இன்று (09.02.2020) மருதமுனை கலாசார மத்திய நிலையத்தில் நடைபெற்றது.
இந்தக் கலந்துரையாடல் கூட்டத்தில் அவையத்தின் ஓராண்டு காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விடயங்கள் மற்றும் எதிர் காலத்தில் முன்னெடுக்க வேண்டிய விடயங்கள் பற்றி பலரும் தமது கருத்துக்களை தெரிவித்தனர்.
பிறை எப்.எம்.நிலையக் கட்டுப்பாட்டாளர் பஸீர் அப்துல் கையும் தலைமை உரை நிகழ்த்தினார். அவையத்தின் தலைவர் ஏ.எச்.எம்.அன்சார் தனது உரையில் ஊரின் கல்வி முன்னேற்ற செயற்பாடுகள் பற்றி விரிவாக பேசினார். வசதி குறைந்தவர்களுக்கு உதவ முன்வர வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தார்.
மன்னார் மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி ரி.எல்.அப்துல் மனாப், மருதமுனை வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.ஆர்.எம்.அஸ்மி, கணக்காளர் வை.கபீபுல்லா உட்பட பலர் இங்கு உரையாற்றினார்கள்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts