பிராந்தியம் | அரசியல் | 2020-02-08 20:30:44

பொத்துவில் ஊருக்காக உழைத்தவரும், இனிமேல் உழைக்கக்கூடியவருக்கும் தோள் கொடுக்க இணைந்துள்ளோம் : தேசிய காங்கிரசில் புதிதாக இணைந்தவர்கள் அறிவிப்பு !!

(ஹுதா உமர்) 

இன்று (08 ) மாலை பொத்துவிலில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தேசிய காங்கிறஸில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பிலான முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் எம்.எஸ்.முபாறக், முஸ்லிம் காங்கிறஸ் மத்திய குழு உறுப்பினர் எம்.கே.ஸறீம், அகில இலங்கை மக்கள் காங்கிறஸின் பொத்துவில் இளைஞர் அமைப்பாளர் தமீம் என்பவர்கள் தேசிய காங்கிரஸின் தலைமையோடு இணைந்து கொண்டனர்.

இங்கு புதிதாக தேசிய காங்கிரசில் இணைந்து கொண்டவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் கடந்த காலங்களில் பொத்துவில் மண்ணை அன்னியர்கள் ஆட்சி செய்தது போல் நாம் நம்பிய எமது தலைவர்களும் எமது மக்களை ஏமாற்றி விட்டனர். எமது மண்ணுக்கான அவசியமானவைகளைக்கூட செய்யாமல் நாம் சார்ந்திருந்த கட்சித்தலைமைகள் எமது ஊரை ஏமாற்றினர். இதற்கு முதலோ, இனிமேலோ எமது உணர்வுகளையும் தேவைகளையும் அறிந்த ஒரே தலைவர் தேசிய காங்கிறஸின் தலைவரே என்பதை நாம் நன்கு உணர்ந்ததால் எமது ஊரின் நன்மைக்காக தோள் கொடுக்க இணைந்தோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts