(ஏ.எல்.எம்.ஷினாஸ்)
மருதமுனை அந்நஹ்லா அரபுக் கல்லூரி ஏற்பாடு செய்த சுதந்திர தின நிகழ்வுகள் கல்லூரி வளாகத்தில் நேற்று (04.02.2020) நடைபெற்றது.
கல்லூரியின் அதிர் பதில் நீதிபதியும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான ஏ.எம்.பதுறுத்தீன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சிரேஸ்ட சட்டத்தரணி எப்.எம்.அமீறுல் அன்சார் மௌலானா பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இங்கு மாணவர்கள் தேசிய கொடியை ஏந்தியவாறு நாம் இலங்கையர் என்ற தேசப்பற்றை வெளிப்படுத்தினார்கள். நாட்டின் சுபீட்சமான எதிர்காலத்திற்காக மரக்கன்றும் இங்கு நாட்டிவைக்கப்பட்டது. இதில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ரி.எம்.முபாரிஸ், கல்லூரியின் அதிபர் அஸ்செய்க் மௌலவி ஏ.அபூஉபைதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.