(ஏ.எல்.எம்.ஷினாஸ்)
மருதமுனை ஹியூமன் லின்ங் மாற்றுத் திறனாளிகளுக்கான வளப்படுத்தல் மத்திய நிலையம் ஏற்பாடு செய்த 72 வது சுதந்திர தின நிகழ்வுகள் வளப்படுத்தல் மத்திய நிலையத்தில் (04.02.2020) நடைபெற்றது.
நிலையத்தின் தவிசாளர் எஸ்.எல்.அஜ்மல்கான் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சிரேஸ்ட வரி மதிப்பீட்டாளர் ஐ.எல்.றூமில் பிரதம அதிதியாக வும் சட்டத்தரணி பிரேம் நபாத் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர்.
இங்கு ஜனாதிபதியின் தேசிய வேலைத்திட்டத்திற்கு அமைய மரக்கன்றும் அதிதிகளால் நாட்டி வைக்கப்பட்டது.