எம்.எம்.ஜபீர்
சம்மாந்துறை ஜனாதிபதி விளையாட்டுக் கட்டிட தொகுதி வளாகத்தில் 72வது தேசிய சுதந்திர தினத்தினை முன்னிட்டு ஏற்பாடு செய்த மரநடுகை நிகழ்வு சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட் தலைமையில் இன்று சிறப்பாக இடம்பெற்றது.
இவ்மரநடுகை நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்களான எம்.ரீ.பௌசுல்லாஹ், ஏ.எம்.எம்.றியாஸ், எம்.எஸ்.சரீபா, சம்மாந்துறை பிரதேச சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஏ.அப்துல் றஸாக், ஜனாதிபதி விளையாட்டுக் கட்டிட தொகுதியின் பெறுப்பாளர் ஏ.ஏ.சலாம், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் உள்;ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.