(எம்.என்.எம்.அப்ராஸ்)
இலங்கையில் 72வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கல்முனை சமுர்த்தி வங்கி வலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சுதந்திர தின நிகழ்வுகள் சமுர்த்தி வங்கி அலுவலகத்தில் வலய முகாமையாளர் மோசஸ் புவிராஜ் தலைமையில் இன்று இடம்பெற்றது.
நிகழ்வில் சமுர்த்தி வங்கி கட்டுப்பாட்டு சபை நிர்வாக உறுப்பினர்கள் ,சமுர்த்தி வலய வங்கி உதவி முகாமையாளர்கள், சமுர்த்தி வங்கி உத்தியோகத்தர்கள், பொது மக்கள் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.இதன் போது மரநடுகையும் இடம்பெற்றது.