பிராந்தியம் | அபிவிருத்தி | 2020-02-04 15:21:41

சம்மாந்துறை பிரதேச சபையில் 72வது சுதந்திர தின நிகழ்வு

எம்.எம்.ஜபீர்

சம்மாந்துறை பிரதேச சபையுடன் சம்மாந்துறை சமூக சேவைகள் அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்த  'பாதுகாப்பான தேசம் செழிப்பான நாடு' எனும் தொனிப்பொருளில்; 72வது சுதந்திர தின நிகழ்வு அப்துல் மஜீட் மண்டபத்திற்கு முன்பாக சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.முஹம்மட் நௌஷாட் தலைமையில் இன்று சிறப்பாக இடம்பெற்றது. 

இதன்போது தேசியக்கொடி ஏற்றி, நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்கள் நினைவு கூறப்பட்டதுடன் பயன்தரு மரக்கன்றுகளும்; நடப்பட்டது. இதேவேளை வீதியில் பயணித்த வாகனங்களுக்கு தேசியகொடி வழங்கப்பட்டதுடன், பழமரக்கன்றுகளும் இலவசமாக பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. அத்துடன் சுதந்திர தினத்தினை பிரதிபலிக்கும் வகையில் வீதி நாடகமும் இடம்பெற்றது.

இதில் சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட், சமாந்துறை சமூக சேவைகள் அமைப்புக்களின் தலைவர் ஏ.ஜெ.காமித் இம்டாட், சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், சம்மாந்துறை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள், சமூகசேவைகள் அமைப்புகளின் பிரதிநிகள் என பலரும் கலந்து கொண்டனர்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts