பிராந்தியம் | சமூக வாழ்வு | 2020-02-02 11:24:44

சுதந்திர தினத்தை முன்னிட்டு மருதமுனையில் இரத்ததான முகாம்.

(ஏ.ஆர்.ஏ.நபாயிஸ் )

எதிர்வரும் 4ஆம் திகதி இடம்பெறவுள்ள சுதந்திர தினத்தை முன்னிட்டு ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் மருதமுனை கிளை ஏற்பாடு செய்த மாபெரும் இரத்ததான முகாம் இன்று (02.02.2020) மருதமுனை மசூர் மௌலானா வீதியில் அமைந்துள்ள கிளை அலுவலகத்தில் தலைவர் எம்.எச்.ஏ.அஜிமிர் தலைமையில் நடைபெற்றது.

கல்முனை ஆதார வைத்திய சாலையின் இரத்த வங்கி பிரிவுடன் இணைந்து ஐந்தாவது ஆண்டாக தொடர்ச்சியாக நடைபெறுகின்ற இந்த இரத்ததான நிகழ்வில்; இரந்த வங்கிப் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் என்.ரமேஸ் தலைமையிலான வைத்தியசாலை அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து இரத்தங்களை சேகரித்து கொண்டனர்.

இந்த இரத்த தான முகாமில் ஆண்கள், பெண்கள் என இருபாலாரும் கலந்து கொண்டு இரத்தம் வழங்கினார்கள்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts