கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரனையுடன் நாவிதன்வெளிப் பிரதேச செயலகமும் ,கலை மன்றங்களும் இணைந்து நடாத்தும் பிரதேச கலை இலக்கிய விழா (27) நாவிதன்வெளி கலாசார மத்திய நிலையத்தில் நாவிதன்வெளிப் பிரதேச செயலக உதவிப் பிரதேசசெயலாளர் ந.நவநீதராஜா அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.
பிரதம அதிதிகளாக மாவட்ட உத்தியோகஸ்தர் வி.ஜெகதீஸ்சன் ,பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ், கணக்காளர் ஜனாப்.யு.எல்.ஜவாஹிர், நிர்வாக உத்தியோகஸ்தர் கி.யோகேஸ்வரன், மாவட்ட கலாசார உத்தியோகத்தர் அம்பாரை ஜனாப் ரி.எம்.றின்சான்,பிரதேச கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.எம்.ஸினாஸ் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வின் போது பிரதேச கலை மன்றங்களினால் பல கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது.
நாவிதன்வெளிப் பிரதேசத்தில் முதல் முறையாக நூல் வெளியீடு செய்த எழுத்தாளர் வை.கே.ராஜூ அவர்களுக்கு பாராட்டுதலும், பிரதேச மட்ட கலை இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.