(எம்.எஸ்.ஆதிக்)
ஆலம்குளம் றகுமானியா வித்தியாலயத்தின் பொன் விழா (50 ஆவது) ஆண்டு நிறைவு விழா சனி (30) அன்று பாடசாலை அதிபர் எம்.ஏ.சி.எம்.உபைத்துல்லாஹ் அவர்களின் தலைமையில் றகுமானியா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், பிரதம அதிதியாக ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ அல் ஹாஜ் ஏ.எல்.எம். நசீர்,
முன்னால் அமைச்சர் எம் .எஸ். உதுமாலெப்பை , அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.கே.முஹம்மட்,அட்டாளைச்சேனை கோட்ட கல்வி பணிப்பாளர் எம்.ஏ.சி.கஸ்ஸாலி,சிரேஸ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர் அவர்களும் மற்றும்,ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள், பொற்றோர்கள் , மற்றும் பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.