(ஷில்மியா யூஸுப்)
மவுன்ட் ஹிரா சர்வதேச பாலர் பாடசாலையின் வருடாந்த கலை விழா கடந்த (27) பணிப்பாளர் திரு ஸாஹித் மற்றும் அதிபர் திருமதி நாஷிதா நவ்ஃபல் ஆகியோரின் தலைமையில் பாணந்துறை ஹேனமுல்லை உம்முல் மலீஹா கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதில் விசேட அதிதியாக வளவாளர் திரு ஸாபிர் ஹாஷிம் கலந்து கொண்டு உரையாற்றினார்.
இங்கு ,மாணவர்கள், ஆசிரியர்கள்,பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
திறமைகள் வெளிக்காட்டிய மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி ஒன்றிணைந்து செயற்பட்ட ஆசிரியர் குழாத்துக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
அன்றையதினம் மாணவர்களின் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.