பிராந்தியம் | சமூக வாழ்வு | 2019-11-26 22:39:16

கல்முனை கலாசார அபிவிருத்தி குழு கூட்டம்.

(மருதமுனை நிஸா)

கல்முனை கலாசார மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் கலாசார அதிகார சபை நிருவாக கூட்டம் செவ்வாய் (26) அன்று கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

வருடாந்த கலைகலாசார விழா நடாத்துவது பற்றியும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் விவாதம், கலைஞர் சுபதம் விருது வழங்கும் நிகழ்வு, மாவட்ட மட்டத்தில் முதலாம் இரண்டாம் மூன்றாம் இடம் பெற்றவர்களுக்கு பாராட்டு நிகழ்வு பற்றியும் இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

இந்நிகழ்வில் , பிரதேச செயலாளர்,கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் உட்பட அதிகாரசபை உறுப்பினர்கள் கலைஞர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts