கிலத்தின் அருட்கொடை எம்பெருமானார் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நினைவாக மாபெரும் மீலாதுன் நபி விழா ஊர்வலம் கல்முனை சுன்னத்வல் ஜமாஅத் இறாக் நட்புறவு ஒன்றியத்தின் ஏட்பாட்டில் மிக விமர்சையாக கல்முனையில் (10) நடைபெற்றது.
இதன்போது கல்முனை முஹ்யுத்தீன் ஜும்மா பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரை பள்ளிவாசலின் தலைவர் டாக்டர் S.M.A அஸீஸ் அவர்களினால் உணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டதுடன் கண்ணியமிக்க உலமாஉகளுளினால் துஆ பிராத்தனையும் இடம்பெற்றது.
கல்முனை கடற்கரை பள்ளிவாசல் நாகூர் ஷாகுல் ஹமீது பாதுஷா நாயகம் அன்னவர்களின் தர்ஹா வளாகத்திலிருந்து ஆரம்பமான இப் புனித மீலாதுன் நபி விழா ஊர்வலமானது கல்முனையில் உள்ள பல உள்ளக வீதிகளின் ஊடாக சென்று கல்முனை நகரின் பிரதான வீதி வழியாக வலம் வந்து மீண்டும் கல்முனை கடற்கரை பள்ளிவாசலில் முடிவடைந்தது. இப் புனித மீலாதுன் நபி விழா ஊர்வலதில் குர்ஆன் மதரஸா மாணவர்கள், உள்ளூர், வெளியூர் உலமாஉகளும், பெரியார்களும், பொதுமக்களும் கலந்து சிறப்பித்தனர்.
இதேவேளை கல்முனையில் உள்ள பல சமூக அமைப்புக்கள் ,வர்த்தகர்கள், இளைஞர் கழகங்கள், மீனவர் சமூகத்தினர் மற்றும் தனவந்தர்களும் மீலாதுன் நபி விழா நிகழ்வுகளை ஏற்பாடு செய்து எம்பெருமானார் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை புகழ்பாடி ஸலவாத் முழக்கத்துடன் வீதிகளில் வலம்வரும் குர்ஆன் மதரஸா மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு பண்டங்ளையும் , உணவுப் பொதிகளையும் வழங்கி மகிழ்வித்தனர்.