கலை இலக்கியம் | அபிவிருத்தி | 2019-04-11 13:55:20

14 வது அகவையில் காலடி வைக்கும் பிறை வானொலி.

பிறை வானொலி ஆரம்பிக்கப்பட்ட பட்டு இன்றோடு (04.11.2019)14 வருடங்கள்.
முன்னாள் ஊடகத்துறை பிரதிஅமைச்சர் சட்டத்தரணி எம்.எச்.ஷேஹு இஸ்ஸடீன் அவர்களின் முயற்சியால் இவ்வானொலி 04.11.2005 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
கடந்த 14 வருடங்களாக இப்பிரதேச மக்களின் கலை, கலாசார, ஆன்மீக, விளையாட்டு, வர்த்தக துறைகளை மேம்படுத்துவதில் இவ்வானொலி அளப்பரிய சேவையாற்றியுள்ளது. அதுமட்டுமல்லாது கடந்த 14 ஆண்டுகளாக இலாபமீட்டும் சேவையாக பிறை வானொலி மிளிர்ந்து கொண்டிருக்கிறது.
கடந்த வருடம் இடம்பெற்ற அரச வானொலி விருது விழாவில் பிறைக்கு மூன்று விருதுகள் கிடைக்கப்பெற்றதும் மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.
மேலும் சிறப்பான சேவையை இன்னும் இன்னும் வழங்க வேண்டும் எனவும்
14 ஆவது அகவையின் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறது எமது tm news இணையதளம்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts