கலை இலக்கியம் | அபிவிருத்தி | 1970-01-01 05:30:00

தேசிய மட்டத்தில் இளைஞர் அறிவிப்பாளர் போட்டியில் 2ம் இடத்தைப் பெற்று கிழக்கு மாகாணத்திற்கு பெருமை சேர்த்துள்ளார் இன்சாப்

மருதமுனை நிஸா

இளைஞர்களுக்கான அறிவிப்பாளர் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம்
இடத்தை பெற்றுள்ளார் அம்சார் முஹம்மட் இன்சாப்.

 சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலை யில் உயர் தரத்தில் கலைப்பிரிவில் இறுதி வருடத்தில் கல்வி கற்கும் இவர், இளைஞர்களுக்கான அறிவிப்பாளர் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளார்.
40 வருடங்களுக்கு பிறகு 1 ம் இடம், 2ம் இடம், 3ம் இடம் என கிழக்கு மாகாணத்திற்கு கிடைத்த தொடர் வெற்றி இதுவாகும். 


இந்த வெற்றியில் ஒரு முஸ்லிம் மாணவனாக அறிவிப்பு போட்டியில் இரண்டாவது இடத்தை
வெற்றி பெற்று தன் மண்ணிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் 41 வது வருடாந்த விருது வழங்கல் விழா 2019க்கான(13-29)வயதுக்குட்பட்ட அறிவிப்பாளர் போட்டியில்,
சம்மாந்துறை பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தி மாவட்ட மட்ட போட்டியில் காரைதீவில் பல போட்டியாளர்களுடன் பங்குபற்றி மூன்றாம் இடத்தையும்,
மட்டக்களப்பில் நடைபெற்ற மாகாண மட்ட போட்டியில் 9 போட்டியாளர்களுள் இரண்டாவது இடத்தையும் பெற்று,
கொழும்பில்(2019.07.11) மகரகம தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் நடைபெற்ற தேசிய மட்ட போட்டியில் 9 மாகாணங்களையும் சேர்ந்த 27 போட்டியாளர்களுடன் போட்டியிட்டு இரண்டாம் இடத்தையும்,மேலும் கடந்த 2018 ம் ஆண்டுக்கான இளைஞர் சேவை மன்றத்தினால் நடைபெற்ற மாகாண மட்ட அறிவிப்பாளர் போட்டியில் முதலிடத்தைப் பெற்று அரச விருதினையும் பெற்றுள்ளார். 


இதுவரையில் தேசிய விருது ஐந்தினை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts