பிராந்தியம் | கல்வி | 2019-10-15 06:18:00

கல்முனை அஸ்-ஸுஹரா வித்தியாலயத்தில் ஆசிரியர் தின நிகழ்வுகள்

எம்.என்.எம்.அப்ராஸ்

கல்முனைஅஸ்-ஸுஹரா    வித்தியாலயத்தில்

 சர்வதேச ஆசிரியர் தின நிகழ்வுகள் 

 பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழுவினரின்  நெறிப்படுத்தலில் 

பாடசாலை அதிபர்  ஏ.எல்.ஏ. கமால் அவர்களின்  தலைமையில் இன்று 14.10.2019 நடைபெற்றது.

இந்  நிகழ்வின் பிரதம அதிதியாக கல்முனை  வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.ஜலீல்  அவர்களும் கெளரவ அதிதியாக கல்முனை வலய கோட்டக் கல்விப் பணிப்பாளர்  பி.எம்.பதுர்தீன்  மற்றும் ஆசிரியர்கள்

 பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர்,பழைய மாணவர்கள்  ஆசிரியர்கள்,  

ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் ஆசிரியர்கள்,மாணவர்களின் கலை நிகழ்வுகள் நடைபெற்றதுடன்  ஆசிரியர்கள் நினைவு சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts