பெரியநீலாவணை புலவர்மணி சரிபுத்தின் மகா வித்தியாலயத்தில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் ஆறு(6) மாணவர்கள் வெட்டுப்புள்ளி க்கும் கூடுதலான புள்ளிகளை பெற்று சாதனை புரிந்துள்ளதாக பாடசாலையின் அதிபர் எம்.எம் முஹம்மது நியாஸ் தெரிவித்துள்ளார்.
சித்தியடைந்த மாணவர்கள் விபரம்
1.முஹம்மத் முகமட் முஜிப் சைப் சராப்- 166
2.மனாஸ் மஹா- 167
3.அஸ்லம் பாத்திமா ரீனா -157
4.அக்பர் கலீம் ஆரிஸ் அஹமட்- 157
5.முஹம்மட் முஸம்மில் மிலானி நுஜா-161
6. முஹம்மட் ரியாஸ் றியாதா பதீன்-173
சிறந்த பெறுபேற்றை பெறுவதற்கும் மாணவர்களின் வெற்றிக்கும் உறுதுணையாக செயற்பட்ட தரம் 5 மாணவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களுக்கும், கல்லூரியின் பிரதி அதிபர் எம்.சி நாசார், உதவி அதிபர் மூசா ஹஸ்மி உட்பட பாடசாலையின் முன்னாள்அதிபர்கள் ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம் மற்றும் பாடசாலை சமூகம் என அனைவருக்கும் கல்லூரி அதிபர் தனது பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.