மருதமுனை "கிறீன் மெக்ஸ்" உதைபந்தாட்ட அணி
ADFA "A" தர கழகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை பிரதேசத்தில் விளையாடி வரும் "கிறீன் மெக்ஸ்"உதைபந்தாட்ட அணி மிகவும் குறுகிய காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு அணியாகும்.
உள்ளுர் சுற்றுப் போட்டிகள் பலவற்றில் "கிறீன் மெக்ஸ்" அணி விளையாடி சம்பியன் கிண்ணத்தை வென்றுள்ளன.
அதிக ரசிகர்களை தன்னகத்தே கொண்ட கிறீன் மெக்ஸ் அணியின் தலைவராக கல்முனை மாநகர சபையின் உறுப்பினர் எம்.எஸ்.உமர் அலி அவர்கள் பணியாற்றுகிறார். செயலாளராக ஆசிரியர் ஏ.ஆர்.எம்.பஸ்லூன் கடமையாற்றுகின்றார்.