மருதமுனை நிஸா
கமு-சது/வீரத்திடல் அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்திற்கு, பெற்றோரினதும் அதிபர் ஆசியர்களின் வேண்டுகோளிற்கிணங்கவும் பா.உ.அல்-ஹாஜ் எம்.ஐ.மன்சூர் அவர்கள் பாடசாலையை பார்வையிடுவதற்காக செவ்வாய் (09.09.2019) அன்று திடீர் விஜயம் ஆனார்.
இப்பாடசாலையின் குறைகளை நேரில் பார்வையிட்டு அங்கிருக்கின்ற தேவைகளை நிறைவேற்ற "கம்பரெலிய" வேலைத்திட்டத்தின்கீழ் நிதி ஒதிக்கீடு செய்து தருவதாக பாடசாலை அதிபர் எம்.ஐ.பதுர்தீன் அவர்களிடம் எழுத்துமூலம் வாக்குறுதியளித்துள்ளார்.
இந்நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினரான எம்.பி.எம்.நவாஸ் அவர்களும் கலந்துகொண்டு பார்வையிட்டார்.
பாடசாலைக்கு அத்தியவசிய தேவையாக இருக்கின்ற,
ஆராதனை மண்டபம்,இருப்பிட வசதிகள்,
பாடசாலை நுளைவாயல் நிர்மானப்பணிகள்,
மைதானத்தை பார்வை அரங்குடன் சேர்த்து புனர்நிர்மானப் பணிகள் ,
சிறுவர் பூங்கா,
சுற்று மதில் ,
போன்றவற்றை பார்வையிட்டார்.எதிர்காலத்தில் இந்த வேலைத்திட்டங்களை பூர்த்தி செய்வதாக பாடசாலையின் அதிபர் ஆசிரியர்களுடனான விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டார் . இவற்றை நிவர்த்தி செய்வதன் மூலம் மாணவர்கள்,அதிபர்,ஆசிரியகளுடனான கலந்துரையாடல் நடைபெற்றது.