மருதமுனை நிஸா
கலை நிகழ்ச்சியும் துறைசார்ந்தோரை கௌரவிக்கும் நிகழ்வும் ஒக்டோபர் 18ம் திகதி நடாத்த இருப்பதாக தீர்மானமும் நிகழ்வுகள் பற்றிய திட்டமிடலும் இன்று ( புதன்) மருதமுனை கலாசார மண்டபத்தில் கல்முனை கலாசார மேம்பாட்டு உத்தியோகத்தர் ஐ.எல். றிஸ்வான் தலைமையில் நடைபெற்றது.
விழாவின் செயலாளர் விஜிலி ஆசிரியரினால் கடந்தவார கூட்டத்தில் எடுத்த முடிவுகள் பற்றி கூட்டறிக்கை வாசிக்கப்பட்டதோடு, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவிருக்கும் விழாவிற்காக நியமிக்கப்பட்ட குழு விபரப்பட்டியலும் கையளிக்கப்பட்டது.
நடைபெற இருக்கும் நிகழ்வில், சஞ்சிகை வெளியிடுதல், துறைசார்ந்தோரை கௌரவித்தல், லோகோ வெளியிடுதல் போன்ற விடயங்கள் தீர்மானிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில், பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர் கலந்துகொண்டார்.