(ஏ.எல்.எம்.ஷினாஸ், பி.எம்.எம்.ஏ.காதர், றாசிக் நபாயிஸ், ஜெஸ்மி எம் மூஸா)
மருதமுனை இஸ்லாமிய பிரச்சார மையம் மற்றும் அக்பர் ஜூம்ஆ பள்ளிவாசல் ஆகியன ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகையும் குத்பா பிரசங்கமும் இன்று (12.08.2019) காலை 6.15 மணிக்கு மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் நடைபெற்றது.
தொழுகையையும் குத்பா பிரசங்கத்தையும் கலாநிதி அஷ்செய்க் எம்.எல்.எம் முபாறக் (மதனி) நிகழ்த்தினார். இதில் பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.