காலை 9.30ற்கு ஆரம்பமாகிய பரீட்சை நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடைந்தது. பரீட்சை நடைபெறும் காலப்பகுதிக்குள் பரீட்சை மத்திய நிலையங்களாகப் பயன்படுத்தப்படும் பாடசாலை வளவில் அனுமதியின்றி எவரும் பிரவேசிக்க முடியாது தடை விதிக்கப்பட்டிருந்ததாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித் தெரிவித்தார்.
இதேவேளை இன்று இடம்பெற்ற புலமைப்பரிசில் பரீட்சையை முன்னிட்டு, விசேட பஸ் சேவைக்கான திட்டம் நடைமுறைப்படுத்தபட்டதாக இலங்கை போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது