விளையாட்டு | விளையாட்டு | 2019-07-05 17:31:22

நட்புடனான உதைபந்தாட்டப் போட்டி சமநிலையில் முடிவடைந்தது

ஏ.எல்.எம்.ஷினாஸ்


பெரியநீலாவணை ஷரிபுத்தீன் மகா வித்தியாலயம் மற்றும் ஷம்ஸ் மத்திய கல்லூரி ஆகிய இரண்டு பாடசாலை அணிகளும்   கலந்து கொண்ட நட்புடனான உதைபந்தாட்டப் போட்டி மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. போட்டி  சமநிலையில் முடிவடைந்தது.

எதிர்வரும்13.07.2019.திருகோணமலையில் நடைபெறவிருக்கும் மாகாணமட்ட  உதைபந்தாட்டப் போட்டியில் 18 வயதுப் பிரிவில்  இந்த  இரண்டு பாடசாலையும் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

ஏற்பாடு செய்த சிரேஷ்ட உடற்கல்வி ஆசிரியர்களான யு.எஸ்.சமீம், எம்.ஆர்.றபிஅமான் ஆகியோருக்கு புலவர்மணி சரிபுத்தீன் மஹா வித்தியாலயத்தின் பிரதி அதிபர் எம்.சி.நஸார் உள்ளிட்ட பாடசாலை சமூகத்தினர் நன்றிகளை தெரிவித்துள்ளனர். 


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts