உள்நாடு | சமூக வாழ்வு | 2019-06-05 18:44:19

பெரியநீலாவணை மஸ்ஜிதுல் ஹூதா பள்ளிவாசல் நோன்புப் பொருநாள் தொழுகையும் குத்பா பிரசங்கமும்

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)

பெரியநீலாவணை மஸ்ஜிதுல் ஹூதா பள்ளிவாசல் நிருவாகத்தினர் ஏற்பாடு செய்த புனித ஈதுல் பித்ர் நோன்புப் பொருநாள் தொழுகையும் குத்பா பிரசங்கமும் இன்று  (05.06.2019) காலை 6.30 மணிக்கு பள்ளிவாசலில் நடைபெற்றது.

இதில் ஆண்கள், பெண்கள் என அதிகமான மக்கள் கலந்து கொண்டனர். சகோதரத்துவத்தை உணர்த்தும் வகையில் ஒருவரை ஒருவர் முஸாபா செய்து பொருநாள் வாழ்த்துக்களையும் பரிமாறிக் கொண்டனர்.

பள்ளிவாசலின் இமாம் அஷ்ஷெய்க் எம்.முஹம்மட் இல்லியாஸ் பெருநாள் தொழுகை மற்றும் குத்பா பிரசங்கம் ஆகியவற்றை நடாத்தினார்.

இன்றைய சமூக சூழலில் முஸ்லிம் மக்கள் மற்றும் இளைஞர்கள் சமூகத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற விடயங்களை மௌலவி தனது குத்பா பிரசங்கத்தில் தெளிவு படுத்தினார்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts