பாறுக் ஷிஹான்
வடக்கு கிழக்கு பகுதியில் அமைக்கப்பட்ட கல் வீட்டுத்திட்டத்தில் முதல்கட்டமாக ஒரு தொகுதி வீடுகள் (2) பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது.
யாழிற்கு விஜயம் செய்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணம் நெடுங்குளத்தில் வைத்து பயனாளிகளிடம் வீடுகளைக் கையளித்தார்.
நிகழ்வில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன , கல்வி இராஜங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், யாழ் மாநகர முதல்வர் இ.ஆர்னோல்ட், உட்பட திணைக்கள அதிகாரிகள், அரசியல் பிரதிநிதிகள்,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.