பாறுக் ஷிஹான்-
யாழ் மாவட்ட புதிய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக நிஹால் தல்துவ (1) தனது பதவிகளைப் பொறுப்பேற்றார்.
காலி அல்பிட்டியில் கடமையாற்றிய நிஹால் தல்துவ புதிய யாழ் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை சர்வமத ஆசியுடன் பொறுப்பேற்றார்.
இப் பதவியேற்பு நிகழ்வானது யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றதுடன் பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதைகளைத் தொடர்ந்து நிஹால் தல்துவ கடமைகளைப் பெறுப்பேற்றார்