றிசாட் பதியுதீன், ஹிஸ்புல்லா, அசாத் சாலி ஆகியோரை பதவி விலக்க வலியுறுத்தி கண்டியில் MP அத்துரலியே ரத்தன தேரர் நடத்தும் போராட்டத்துக்கு ஆதரவாக, வியாழேந்திரன் MP மட்டக்களப்பில் அடையாள உணவுத்தவிர்ப்பு போராட்டத்தை நடத்துகிறார்.
ஏப்ரல் 21 தற்கொலைத் தாக்குதல்களுடன் சம்பந்தப்படுத்தி விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கும் அமைச்சர்களையும் ஆளுநர் களையும் பதவியிலிருந்து விலக்க வேண்டும் என்பதோடு அவர்கள் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்தக் கோரியும் இன்று(01) இந்த அடையாள உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.