ஐக்கிய தேசிய முன்னணியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான
அதுரலிய ரத்ன தேரர், உண்ணாவிரத போராட்டமொன்றை இன்று (31) வெள்ளிக்கிழமை காலை முன்னெடுத்துள்ளார்.
இந்த போராட்டம் தலதா மாளிகைக்கு முன்பாக முன்னெடுத்துக்கப்படுகின்றது.
அமைச்சர் றிசாத் பதியுதீன், ஆளுநர்களான அசாத் சாலி மற்றும் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோரை பதவி விலக்கக் கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.