ஆரம்பக் கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சினால் வறுமை நிலையற்ற இலங்கையினை கட்டியெழுப்பும் பொருட்டு அரசின் புதிய திட்டத்திற்கு அமைய புதிய பயனாளிகளுக்கு சமுர்த்தி உரித்துப்படிவம் வழங்கும் நிகழ்வு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களது பங்கேற்புடன் அமைச்சர் தயா கமகே தலைமையில் அம்பாறை நகர சபைத்திடலில் இடம்பெற்றது.
இதில் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்