விளையாட்டு | விளையாட்டு | 2019-04-14 01:41:06

ஆரம்ப போட்டியில் மருதமுனை கோல்ட் மைன்ட் அணி வெற்றி

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)

மருதமுனை யுனிவர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனம் நடாத்தும் அமைச்சர் அல்ஹாஜ் றிஷாட் பதியுதீன் அழைப்பு கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் ஆரம்ப நிகழ்வும்,முதலாவது போட்டியும் (12.04.2019) மசூர் மெளலானா விளையாட்டு மைதானத்தில்  நடைபெற்றது.

முதலாவது போட்டியில் மருதம் வி.கழகம் மற்றும் கோல்ட்மைன்ட் ஆகிய அணிகள் ஒன்றை ஒன்று எதிர்த்து விளையாடியது. ஆரம்ப முதல் போட்டியில் செல்வாக்கு செலுத்திய கோல்ட்மைன்ட் அணியினர் 8 ற்கு 0 என்ற அடிப்படையில் மருதம் அணியினரை வெற்றி கொண்டு அடுத்த சுற்றுக்கு தெரிவாகியுள்ளார்கள்.

ஆரம்ப நிகழ்வுக்கும் முதலாவது போட்டிக்கும் பிரதம அதிதியாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மயில் கலந்து கொண்டார்.

அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளர் எம்.ஐ.எம்.மனாப் (மாநகர சபை உறுப்பினர்) ,மாநகர சபை உறுப்பினர்களான எம்.எஸ்.உமர் அலி, ஏ.ஆர்.அமீர், சுற்றுப் போட்டிக்குழு தவிசாளர் அப்பாஸ் எம்.நியாஸ் , யுனிவர்ஸ் வி.கழகத்தின் தலைவரும் கணக்காளருமான றிஸ்வி யஹ்ஸர், செயலாளர் ஏ.எம்.எம்.ரஜி உட்பட பலர் கலந்து கொண்டனர். 


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts