(ஏ.எல்.எம்.ஷினாஸ்)
மருதமுனை யுனிவர்ஸ் விளையாட்டுக்கழகத்தின் அனுசரணையோடு அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனம் நடாத்தும் "அல்-ஹாஜ் றிஷாத் பதியுத்தீன் அழைப்பு உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி-2019” ஆரம்ப நிகழ்வும் முதல் போட்டியும் இன்று (12) மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்த சுற்றுப்போட்டியில் அம்பாறை மவட்டத்திலிருந்து கல்முனை லக்கி ஸ்டார், சனிமெவ்ன்ட், பிரிலியண்ட் , சாய்ந்தமருது பிளேன் கோர்ஸ், சவளைக்கடை அமீர் அலி, மருதமுனை ஒலிம்பிக், ஈஸ்டன் யூத், கோல்ட் மைன்ட், எவரடி,கிறீன் மெக்ஸ்,மருதம், யுனிவர்ஸ் மட்டக்களப்பு மைக்கல் மேன், ஏறாவூர் அல்-அக்ஸா, யங் ஸ்டார், லக்கிஸ்டார் ஆகிய 16 கால்பந்தாட்ட அணிகள் விளையாடடவுள்ளன.
முதலாவது போட்டியும் ஆரம்ப நிகழ்வும் இன்று (12) ஆரம்பமாகவுள்ளதாக அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளர் எம்.ஐ.எம்.மனாப் (மாநகர சபை உறுப்பினர்) தெரிவித்தார்.
ஆரம்ப போட்டியில் மருதமுனை கோல்ட் மைன்ட் விளையாட்டுக் கழகம் மற்றும் மருதமுனை மருதம் வி.கழகம் என்பன ஒன்றை ஒன்று எதிர்த்து விளையாடவுள்ளது. ஆரம்பப் போட்டியில் மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவரும் கல்முனை மாநகர சபை முதல்வருமான சட்டத்தரணி ஏ.எம்.றகீப், சுற்றுப் போட்டிக்குழு தவிசாளர் அப்பாஸ் எம்.நியாஸ் அனுசரனை கழகமான யுனிவர்ஸ் வி.கழகத்தின் தலைவரும் கணக்காளருமான றிஸ்வி யஹ்ஸர், செயலாளர் ஏ.எம்.எம்.ரஜி உட்பட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.