உள்நாடு | சமூக வாழ்வு | 2019-03-03 13:49:26

காதலித்த பெண்னை நம்பி யாழ் வந்த ஜேர்மன் நாட்டவர் 55 லட்சத்தினைப் பறிகொடுத்தார்

(பாறுக் ஷிஹான்)  

முகப்புத்தகம் ஊடாக காதலித்த பெண்னை நம்பி யாழ்ப்பாணம் வந்த ஜேர்மன் நாட்டில் வாழும் புலம்பெயர் தமிழரொருவர் 55 லட்ச ரூபாய் பணம் நகை என்வற்றை யாழில் பறிகொடுத்துள்ளார்.

குறித்த பெண்ணை நம்பி யாழ்ப்பாணம் வந்தவர் பணத்தை பறிகொடுத்த நிலையில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்திருக்கின்றனர். 

இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, 

வவுனியாவில் வாழ்வதாக கூறி முகப்புத்தகம் ஊடாக ஜேர்மன் நாட்டில் வாழும் புலம்பெயர் தமிழர் ஒருவரை குறித்த பெண் காதலிப்பதாக கூறி முகநூலில் காதலித்துள்ளார்.

அதனை நம்பி குறித்த புலம்பெயர் தமிழர் கோப்பாய் பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு கடந்த தை மாதம் வந்துள்ளார். அவருடன் அவருடைய முகப்புத்தக காதலியும் வந்து ஒரு வீட்டில் தங்கியிருந்துள்ளனர். 

இவ்வாறு 14 நாட்கள் கடந்த பின்னர் திடீரென ஒருநாள் முகப்புத்தக காதலி வீட்டிலிருந்த பணம், நகைகள், பொருட்கள் என சுமார் 55 லட்சம் ரூபாயினை கொள்ளையடித்துக் கொண்டு தப்பி ஓடியுள்ளார் 

இதனையடுத்து பாதிக்கப்பட்டவார் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு கொடுத்துள்ளார்.

முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts