வெளிநாடு | அரசியல் | 2019-02-28 06:52:57

காஷ்மீரில் விழுந்து நொறுங்கிய இந்திய விமானப்படையின் போர் விமானம்

காஷ்மீர் பகுதியில் ஏற்பட்டுள்ள இந்திய - பகிஸ்தான் மோதல் காரணமாக அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. (26)அதிகாலை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் சென்று இந்திய இராணுவப்படை நடத்திய வான் தாக்குதலில் பாகிஸ்தான் முகாம் அழிக்கப்பட்டு ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 

அதன்பின்னர் பாகிஸ்தான் படைகள் எல்லைப்பகுதியில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இந்திய இராணுவம் உஷார்படுத்தப்பட்டு, பாகிஸ்தான் படைகளுக்கு பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. விமானப்படை விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் பத்காம் மாவட்டத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த மிக் ரக போர் விமானம் விபத்துக்குள்ளானது. பத்காம் விமான நிலையத்தில் இருந்து 7 கி.மீ தொலைவில் விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் விழுந்து நொறுங்கியிருக்கலாம் என்றும், விமானத்தில் பயணித்த பைலட் உயிரிழந்திருக்கலாம் எனவும் ஆரம்பத்தில் தகவல்கள் வெளியாகியிருந்தன. 

இதேவேளை பாகிஸ்தான் பகுதிக்குள் இந்திய விமானப்படையின் 2 விமானங்களை சுட்டு வீழ்த்திவிட்டதாக, பாகிஸ்தான் இராணுவ தளபதி ஆசிப் கபூர் கூறியுள்ளார். இந்திய விமானி ஒருவரை கைது செய்திருப்பதாகவும் தெரிவித்தார். (ஒளி நாடாக்களும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது) இவ்வாறு இரு நாடுகளும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் எல்லையில் பதற்றம் நீடிக்கிறது. 

இரு நாடுகளின் விமானப்படையும் எல்லைதாண்டி வந்து தாக்குதலில் ஈடுபட்டதையடுத்து, காஷ்மீர் வான் பகுதியில் போர் விமானங்கள் தவிர எந்த விமானங்களும் பறக்கக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. 

(மாலைமலர்)


Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts