வெளிநாடு | குற்றம் | 2019-01-23 12:25:03

பாகிஸ்தானில் எரிபொருள் லொறி மோதி பஸ் தீப்பிடித்ததில் 27 பேர் பலி

பாகிஸ்தானில் எரிபொருள் லொறி மோதி பஸ் தீப்பிடித்து விபத்திற்குள்ளானதில் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து பஞ்ச்குர் என்ற இடத்திற்கு நேற்று (21) பஸ் ஒன்று 40 பேருடன் புறப்பட்டது. இந்த பஸ் லாஸ்பெல்லா எனும் பகுதி அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே தாறுமாறாக வந்த லொறி மோதி விபத்திற்குள்ளானது.

இந்த சம்பவத்தில் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது. இவ்விபத்தில் இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் 10-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 6 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இக்கோர விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts