கலை இலக்கியம் | சமூக வாழ்வு | 2021-04-07 07:13:04

கலாச்சார அதிகாரசபையின் ஏற்பாட்டில் கலை, இலக்கிய, ஊடக பிரமுகர்களுக்கான நினைவரங்கம்.

(ஹுதா உமர்)

சாய்ந்தமருது பிரதேச செயலக கலாச்சார பிரிவு மற்றும்  கலாச்சார அதிகாரசபையின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது பிரதேசத்தில் இருந்து அண்மையில் காலமான கலை, இலக்கிய, ஊடக பிரமுகர்களை நினைவு கூர்ந்து அவர்களுக்கான நினைவரங்கம் இன்று காலை சாய்ந்தமருது சமூர்த்தி வங்கி கேட்போர் கூடத்தில் சாய்ந்தமருது பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர் எம்.ஐ.எம். அஷ்ரபின்  தலைமையில் நடைபெற்றது. 

இந்த நினைவரங்கத்தில் கலாபூசணம் மருதூர் ஏ மஜீத் தொடர்பிலான நினைவுரை ஓய்வு பெற்ற அதிபர் கலாபூசணம் ஏ.ஏ. பஸிரும், வித்தகர் நூருல் ஹக் தொடர்பிலான நினைவுரையை இலக்கிய ஆர்வலர் நவாஸ் சௌபியும் நிகழ்த்தினார். மேலும் கலைமகள் ஹிதாயா றிஸ்வி தொடர்பிலான நினைவுரையை ஓய்வு பெற்ற கோட்டக்கல்வி அதிகாரி கலாபூசணம் ஏ.பீர்முஹம்மட் நிகழ்த்தினார். மற்றும் நினைவு கவிதைகளை கவிஞர் கலைமகன் நூருல் ஹுதா உமர், கவிஞர் கே.எம்.ஏ. அஸீஸ், கவிதாயினி சுஹைல் அஸீஸ், கவிதாயினி ஷப்னா அமீன், கவிஞர் அலிக்கான் ஆகியோர் நிகழ்த்தினர். 

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக் கலந்து கொண்டதுடன் உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ. முவஃபிகா, கலாச்சார அபிவிருத்தி உத்தியோகத்தார்களான யூ. கே.எம். றிம்ஸான், ஆர். ஜெஸீரா, எம்.எஸ். றஜாயா, கலாச்சார அதிகாரசபையின் பொருளாளர் கலைஞர் அஸ்வான் மௌலானா உட்பட கலாச்சார அதிகாரசபையின் உறுப்பினர்கள், கலைஞர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts