பிராந்தியம் | சமூக வாழ்வு | 2020-04-03 19:58:46

-சம்மாந்துhறையில் பொதுமக்கள் வந்து செல்லும் இடங்கள் தொற்று நீக்கி விசிறப்பட்டு சுத்தப்படுத்தும் பணி..

(எம்.எம்.ஜபீர்)

சுகாதார அமைச்சின் வழிகாட்டலுக்கு அமைவாக கொவிட் 19 எனும் கொரோனா வைரஸ் தொற்றி நோயை தடுக்கும் நோக்கில் சம்மாந்துறை பிரதேச சபையும் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும் இணைந்து அரச அலுவலகம் மற்றும் பொது இடங்களில் தொற்று நீக்கி விசிறும் வேலைத்திட்டம் இன்று வெள்ளிக்கிழமை காலை முன்னெடுக்கப்பட்டது.

இதற்கமைவாக சம்மாந்துறை பிரதேச சபை, மாவட்ட ஆயுள்வேத வைத்தியசாலை, சென்னல் கிராமம் ஆரம்ப சுகாதார நிலையம், வங்கிகள், எரிபொருள் நிரப்பும் நிலையங்கள்,  உள்ளிட்ட  அதன் சுற்றுபுற சூழல் பொதுமக்கள் வந்து செல்லும் இடங்கள் தொற்று நீக்கி விசிறப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts