(ஏ.எல்.எம்.ஷினாஸ்)
கல்முனை வடக்கு பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த விசேட பூஜை வழிபாடும் விழிப்புணர்வு நிகழ்வும் இன்று (20.03.2020) பிரதேச செயலாளர் ரி.ஜெ.அதிசயராஜ் தலைமையில் செயலக வளாகத்தில் நடைபெற்றது.
கொரோனா வைரஸ் நோயானது தொடர்ந்து பரவுவதை கட்டுப்படுத்தவும் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடையவும் வேண்டி இந்த பூஜை வழிபாடு நடைபெற்றது. என பிரதேச செயலாளர் தெரிவித்தார்.
இதே வேளை மாவட்ட செயலகத்தின் அறிவுறுத்தலுக்கமைய பொதுமக்களை விழிப்புணர்வூட்டும் சுவரொட்டிகளையும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பிரதேச செயலாளர் வழங்கிவைத்தார்.
இதில் அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகத்தர் எஸ்.சிவகுமார் உட்பட சமூர்த்தி முகாமையாளர், கிராமசேவை நிருவாக அதிகாரி என குறிப்பிட்ட சில உத்தியோகத்தர்கள் மாத்திரம் கலந்து கொண்டனர்.
இதேவேளை பிரதேசத்திலுள்ள இளைஞர்கள் பொதுமக்களை அறிவுறுத்தும் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களையும் பொதுமக்களுக்கு வினியோகித்து வருவதையும் காணக்கூடியதாக இருந்தது.