மன்னார் - மதவாச்சி நெறியகுளம் சந்தி பகுதியில் இன்று (12.03.2020) மணியளவில் இடம்பெற்ற கோர விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளனர். இவர்கள் செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை போக்குவரத்து சபை வவுனியா சாலைக்கு சொந்தமான பேருந்தும் கொழும்பு மன்னார் தனியார் பேருந்தும் மோதுண்டு இ.போ.ச பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.