சற்று முன் (இரவு 8.20) வவுனியா பன்றிக்கெய்தகுளம் பகுதியில் பேருந்தும் வேனும் நேருக்கு நேர் மோதியதில் ஐவர் பலியாகியதுடன் பலர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை பேருந்துக்கு சிலர் தீ வைத்துள்ள நிலையில் விபத்துக்குள்ளான வேனும் தீயில் எரிந்துள்ளது. இதன்போது வேன் சாரதியும் தீயில் எரிவதாக தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியாவில் இருந்து பருத்தித்துறை நோக்கி சென்ற பேருந்தும் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு சென்ற வேனுமே மோதியுள்ளது.
இதன்போது அங்கிருந்தவர்களால் பேருந்துக்கு தீ வைக்கப்பட்ட போது விபத்துக்குள்ளாகிய வேனும் தீயில் எரிந்துள்ளது. இதன்போது வானுக்குள் இருந்த சாரதியும் தீயில் எரிவதாக தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்தார்கள் அம்பியுலென்ஸ்களில் வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் ஐவர் பலியாகியதுடன் இருபதுபேர் காயமடைந்துள்ளதாக அறியமுடிகின்றது.
தீப்பற்றிய வாகனங்கள் தீயணைப்பு படையினரால் அணைக்கப்பட்டு வரும் நிலையில் ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
தற்போது ( இரவு 9.15) விசேட அதிரடிப்படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.