பிராந்தியம் | அரசியல் | 2020-02-23 16:17:33

பொதுத்தேர்தல் நடைபெற்று 2 மாதங்களில் மாகாண சபைத்தேர்தல்:அமைச்சர் நிமல் தெரிவிப்பு

மாகாணசபைத் தேர்தலை நடாத்துவதற்கான சட்டமூலத்தை அடுத்தவாரம் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்

மஹியங்கணைப் பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பிலே அவர் இதனைக் குறிப்பிட்டார்

பொதுத்தேர்தல் இடம்பெற்று இரண்டு மாதங்களுக்குள் மாகாணசபைத்தேர்தல் நடாத்தப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.
நாடாளுமன்றம் எதிர்வரும் மார்ச் மாதம் இரண்டாம் திகதி கலைக்கப்படுவதோடு எதிர்வரும் ஏப்ரல் 25 ம்திகதி பொதுத்தேர்தல் நடாத்தப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்வரும் பொதுத்தேர்தலுக்கு 500 கோடி ரூபா செலவாகுமென மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Related Posts

Our Facebook

Time

Flags Counter

Flag Counter

Popular Posts