(எம்.என்.எம்.அப்ராஸ்)
கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலத்தின் 60வது ஆண்டு
நிறைவை முன்னிட்டு நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை ஒழுங்கமைக்கும் முகமாக
பாடசாலையில் கல்வி கற்ற பழைய மாணவர்களினை ஒன்றிணைப்பதற்கான ஒன்றுகூடல் கலந்துரையாடல் மற்றும்
விழாக் குழு தெரிவும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 23/02/2020 திகதி பிற்பகல் 4.00 மணியளவில் பாடசாலையின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
எனவே இவ் ஒன்றுகூடலில் எமது பாடசாலையில் கல்வி கற்ற சகல பழைய மாணவர்களும் தவறாது கலந்து கொள்வதோடு இவ்விழாவினை மிகவும் சிறப்பான முறையில் நடாத்துவதற்கு தங்களின் பூரண ஒத்துழைப்பினை வழங்குமாறு பாடசாலை அதிபர் எம்.ஐ அப்துல் ரசாக் கேட்டுக்கொண்டார்.