(எம்.எம்.ஜபீர்)
களுத்துறை தர்ஹா நகரை சேர்ந்த எம்.எப். முகம்மது பஸ்ஹான் அகில இலங்கை சமாதான நீதவானாக களுத்துறை மாவட்ட நீதிமன்ற நீதவான் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
இவர் தர்ஹா நகர் சாஹிரா பாடசாலை பழைய மாணவரும், காலி கிந்தொட்டை அல்பயான் அரபுக் கல்லூரியில் மொளலவி பட்டம்பெற்ற மார்க்கப் போதகரும், இங்கிலாந்து மேட்ரோ பல்கலைக் கழகத்தில் வியாபார முகாமைத்துவத் துறையில் பட்டம்பெற்றுள்ளார்.
புர்ஹான் சமூக சேவை அமைப்பின் தலைவரும் சமூக சேவையில் மிகவும் ஆர்வமாகவும் சிறப்பாகவும் தன்னை அர்பனித்து வருபவருமாவார். இவர் முகம்மது புர்ஹான், சீனதுல் முனவ்வரா ஆகியோரின் மூத்த புதல்வருமாவார்.