(ஊடகப்பிரிவு)
இலங்கைக்கான பாகிஸ்தானிய புதிய உயர்ஸ்தானிகர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் முஹம்மது ஸாத் கத்தாக் அவர்களின் அழைப்பையேற்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், அவரை சந்தித்துக் கலந்துரையாடினார்.
உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று (12) இடம்பெற்ற இந்த சந்திப்பில், பிரதி உயர்ஸ்தானிகர் தன்விர் அஹ்மத்தும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.